கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5 உண்மையும் புனைவும் சொற்பொழிவு

viduthalai
1 Min Read

கும்பகோணம், ஜூன் 30- கும்பகோணம் கழக மாவட்டம் ,பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5ஆம்  நிகழ்வு  28.6.2025 சனி மாலை கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில்  நடைபெற்றது.

நட்புறவாடலோடு தொடங்கிய  கூட்டத்திற்கு ஒன்றிய பகுத்தறிவாளர்கள் அமைப்பாளர் கோவி. ராஜீவ் காந்தி தலைமையேற்றார்.

வருகை தந்த அனைவரையும் மாவட்ட  கழக தலைவர் செயலாளர் சு.துரைராசு வரவேற்று பேசினார் .

தொடக்க உரையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி காங்கேயன் பார்க் வரலாற்றினையும், கும்பகோணத்தில் உள்ள தெருக்களின் பெயர்கள் வரலாற்றையும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், நாடக வேந்தர்,  கு.ப. ஜெயராமன் சுவைபட வழங்கினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் பூவை புலிகேசி ‘உண்மையும் – புனைவும்’ என்னும் பொருளில் சிந்தனையை தூண்டும்,  நம்முடைய அறிவை விரிவு செய்யும் அற்புதமான ஒரு உரையை  அடுக்கடுக்கான ஆதாரங்களோடு பார்வையாளர்கள் வியந்தும், தொடர்ந்து அது பற்றிய சிந்தனையோடும் இருக்குமாறும் உரையாற்றினார்.

சிந்தனைக் களம் நிகழ்வுக்கு தொடர்ந்து வருகை புரிந்த சசி.கலிய மூர்த்தி,  சா. கிருபாகரன்,   மேனகா நெப்போலியன் ஆகிய மூவருக்கும் ஒன்றிய கழக  செயலாளர்   சு கலியமூர்த்தி, பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி  முதல்வர் தீபக், பாவை பைந்தமிழ் பேரவை தலைவர் ஆசிரியர் மா.துரை யரசன் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களின் “வாழ்வியல் சிந்தனைகள்” நூல்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இறுதியாக வி.மதிவாணன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *