முதுகுவலியா? நுரையீரல் புற்று நோய்க்கு வாய்ப்புள்ளது

2 Min Read

அரசியல்

நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர் களுக்கு மட்டுமே வருகிறது என்று நினைத் திருந்தோம். சமீபத்திய ஆய்வுகளில் புகை பிடிக்காதவர்களுக்கும் இந்த நோய்த் தொற்று வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. புற்று நோய்களில் மிகவும் மோசமான பட்டியலில் நுரையீரல் புற்றும் ஒன்று ஆகும். இது மற்ற உறுப்பு நோய்களை விட முற்றிய பிறகே அதிகம் வெளியே தெரியும் வாய்ப்பு உள்ளதால் இது மிகவும் ஆபத் தானது ஆகும். சில முக்கிய நரம்புகள் நுரையீரலோடு தொடர்பு கொண்டதாகை யால் மிகவும் எளிதில் இந்தப்புற்றுநோய் உடலில் வேறு பாகங்களுக்குப் பரவி விடுகிறது. எப்போதும் நுரையீரலில் புதிய திசுக் களின் வளர்ச்சியில் இருந்து மாறுபட்டு அதீத வளர்ச்சி புற்று நோயாக மாறிவிடு கிறது. மிகவும் விரைவாக வளரும் நுரை யீரல் புற்று உடனடியாக காற்றுப்பாதைகள் மற்றும் உயிர்வாயு கரியமிலவாயு பரிமாற்றத் தைத் தடைசெய்கிறது, இதில் இனம் புரியாத திடீர் முதுகுவலி நுரையீரல் புற்றுநோயின் மிக முக்கிய அறிகுறி ஆகும்.

நுரையீரல் புற்றுநோய் வளரும் போது முதுகுத்தண்டுவடத்தில் அழுத்தம் ஏற்படுத் துகிறது. நுரையீரல் புற்று உள்ளவர்களுக்கு நடு முதுகு மற்றும் முதுகின் மேல்பகுதி கீழ் முதுகில் வலி ஏற்படும். அதன் பிறகு வலி தோள்பட்டை, தொடையின் பின் பகுதி போன்றவைகளில் பரவி கை மற்றும் கால்கள் முற்றிலும் வலுவிழந்து காணப் படும். உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து நரம்புத் தளர்ச்சி ஏற்படும் நிலைக்கு வந்து விடும். தொடர்ந்து மூன்று வாரங்கள் இடை விடாத முதுகுவலி அதனைத் தொடர்ந்து தோள் பட்டை தொடைப்பகுதிகளில் வலி பரவினால் மருத்துவர்களின் ஆலோசனை களைப் பெறவேண்டும். எல்லா முதுகுவலி களும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறி குறிகள் அல்ல, முதுகுத்தண்டுவடத்தில் அடிபடுதல், மற்றும் முதுகுத்தண்டு என் புருக்கி நோய் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம், நுரையீரல் புற்றுநோய்க்கு என சில அறிகுறிகள்

ஓய்வு நேரங்களிலும் கடுமையான முதுகுவலி, இரவு நேரங்களில் தொடர்ந்து வலி ஏற்படுதல், படுக்கையில் படுத்திருக்கும் போது கடுமையான வலி, ஆழ்ந்த மூச்சு விடும் போது முதுகில் கடுமையான வலி , மற்றும் எந்த ஒரு வலி நீக்க மாத்திரை மற்றும் பிசியோதெரபி போன்றவற்றையும் மீறி வலி அதிகரித்தல் போன்றவைகள் ஆகும். இதனைத் தவிர்த்து ஆழ்ந்த மூச்சு விடமுடியாமை, கடுமையான இருமல், மூச்சுவிடும் போது நெஞ்சுவலி, மயக்கம் மற்றும் இருமும் போது ரத்தம் வருதல் போன்றவை நுரையீரல் புற்றுக்கான அறி குறிகள் ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *