பெரியார் பெருந்தொண்டரும், ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரரும், இயக்கத்தின் அனைத்து போராட்டங்களில் சிறை சென்றவரும், ஒரத்தூர் கி.மாணிக்கம் அவர்கள் (96) வயது மூப்பின் காரணமாக 28.06.25 அன்று இயற்கை எய்தினார். தோழர்களின் இறுதி மரியாதைக்கு பிறகு அவரின் இறுதி நிகழ்வுகள் 29.6.2025 மாலை 4 மணியளவில் நடைபெற்றது.