உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!

Viduthalai

பெட்டி செய்திகள்

உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க வைத்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகிலேஷ்யாதவ் இந்தக்கொடுமை நடந்த அதே பகுதியில் மேடை அமைத்து முகுந்த்மணி மற்றும் அவரது குழுவினரை கதாகலாட்சேபம் செய்யவைத்து தானும் அமர்ந்து கேட்டார்.
பின்னர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
அவர் கூறும்போது பார்ப்பனர்களுக்கு மட்டுமே நாக்கு உள்ளதா?வேண்டுமென்றால் பார்ப்பனர்கள் அவர்களின் ஆட்களின் முன்பு கதாகலாட்சேபம் நடத்தட்டும்! இனிமேல் பார்ப்பனர்களின் கதாகலாட்சேமத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நான் கட்டளையிட வெகுநேரம் ஆகாது. மனிதர்களாக மதிக்கப்பாருங்கள் என்று பேசினார்.
ஆம் தந்தை பெரியார் உத்தரப் பிரதேசத்திலும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *