உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!

1 Min Read

பெட்டி செய்திகள்

உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க வைத்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகிலேஷ்யாதவ் இந்தக்கொடுமை நடந்த அதே பகுதியில் மேடை அமைத்து முகுந்த்மணி மற்றும் அவரது குழுவினரை கதாகலாட்சேபம் செய்யவைத்து தானும் அமர்ந்து கேட்டார்.
பின்னர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
அவர் கூறும்போது பார்ப்பனர்களுக்கு மட்டுமே நாக்கு உள்ளதா?வேண்டுமென்றால் பார்ப்பனர்கள் அவர்களின் ஆட்களின் முன்பு கதாகலாட்சேபம் நடத்தட்டும்! இனிமேல் பார்ப்பனர்களின் கதாகலாட்சேமத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நான் கட்டளையிட வெகுநேரம் ஆகாது. மனிதர்களாக மதிக்கப்பாருங்கள் என்று பேசினார்.
ஆம் தந்தை பெரியார் உத்தரப் பிரதேசத்திலும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *