“சிறு நிகழ்ச்சியாக இருந்தாலும் அர்ப்பணிப்பு உணர்வு டன், திறம்பட செய்வதில் திருநாகேஸ்வரம் தோழர்கள் சிறப்பானவர்கள்”, என்பது ஆசிரியர் கூற்று!
அவ்வகையில் கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, 17.06.2023 அன்று திருநாகேஸ்வரத்தில் நடைபெற்றது.
புது முயற்சிக்குத் தயாரானோம்!
ஒவ்வொரு ஊரிலும் மாணவர்கள் அடைகிற பயன் களும், அனுபவங்களும் ‘விடுதலை’யின் வாயிலாக வெளி வருகிறது!
இங்கோ பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சுக அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்! இதுகுறித்து கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி கூறும் போது, ‘‘மாவட்டத்தின் சார்பாகப் பயிற்சிப் பட்டறையைத் திருநாகேஸ்வரத்தில் நடத்த வேண்டும் என முடிவு செய்த போது தயக்கமாகத் தான் இருந்தது. எவ்வளவோ பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்திய போதிலும் பயிற்சி வகுப்புகள், அதிலும் மாணவர்கள் தொடர்பான நிகழ்ச்சி என்கிற போது தயக்கம் குறைந்தபாடில்லை.
எனினும் நமது தலைவர் அறிவித்துள்ளார் என்கிற போது புது முயற்சிக்குத் தயாராவோம் என்று தான் தொடங் கினோம்! ஆனால் அதுவே எங்களை இந்தளவு மகிழ்ச்சிப் படுத்தும் என நாங்கள் நினைக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்தப் பயிற்சி முகாம் மூலம் நாங்கள் நிறைய கற்றுள்ளோம்! எங்களுக்கே இது ஒரு சிறந்த பயிற்சிதான்!
நாங்கள் எடுத்த சிறந்த முடிவு!
நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் திட்டமிட்டோம். 60 பேர் வந்தனர். பள்ளி நாள் என்பது ஒரு காரணம். இதில் 20 மாணவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆன்மிகக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்! தோழர்கள் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதைப் பார்க்கிறோம்!
போதுமான அளவிற்கு பிளக்ஸ் பதாகைகள், மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள், வீடு, வீடாக சென்று வழங்க துண்டறிக்கைகள் என விளம்பரத்திற்கும் நல்ல முக் கியத்துவம் கொடுத்தோம்.
இந்த நேரத்தில் நாங்கள் ஒரு சிறந்த முடிவு எடுத்ததாக உணர்ந்தோம். ஆம்! மாணவர்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு என்பதால் யாரிடமும் பணமாகப் பெற வேண்டாம்; பொருளாகக் கேட்போம் என்கிற முடிவுதான் அது! அந்த முடிவு எங்கள் அனைவரையும் உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது!
மக்களின் மகத்தான பங்களிப்புகள்!
யாரையும் பெரிய அளவு சிரமப்படுத்தவில்லை. தேநீர் கடை வைத்திருக்கும் ஒரு நண்பரைச் சந்தித்தோம். விவரம் கூறினோம். காலை, மாலை தேநீர் நான் தருகிறேன் என்றார். அப்படித்தான் இன்னொரு நண்பர் 100 நோட்டும், எழுதுபொருளும் தந்தார். இப்படித் தொடங்கிய சிறு, சிறு முயற்சிதான் எங்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், முட்டை, இனிப்பு கார வகைகள், தண்ணீர் பாட்டில் வரை அனைத்தையும் கொண்டு சேர்த்தது.
வாரி, வாரி வழங்கிய வள்ளல்களாக திருநாகேஸ்வரம் மக்கள் திகழ்ந்தார்கள். எங்கள் ஊரை கோயில் நகரம் என்று அழைப்பார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே… தந்தை பெரியார் நாத்திகர்களுக்கு மட்டுமா போராடினார்? ஆத்தி கர்களுக்கும் தானே தம் ஆயுளைப் பயன்படுத்தினார். அதனை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
அனைவருக்கும் விருந்து!
அதேநேரம் நாங்கள் ஒரு முயற்சி செய்தோம். நன் கொடை வழங்கிய அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து, நிகழ்வைப் பார்க்கவும், மதிய விருந்தில் பங்கு பெறவும் கோரிக்கை வைத்தோம். அவ்வகையில் மாணவச் செல்வங் களுக்கு எங்கள் வீட்டிலேயே ஆட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி வறுவல், மீன், முட்டை ஆகியவற்றை சமையல் காரர்கள் வைத்து ஏற்பாடு செய்தோம்!
மாணவர்களோடு இணைந்து நன்கொடையாளர்களும் விருந்தில் பங்கேற்றது வித்தியாசமாக இருந்தது. அதேநேரம் தாம் வழங்கிய பொருட்கள் சரியான வகையில் பயன்படுத் தப்பட்டது என்கிற நிறைவைப் பெற்றார்கள். அதுதான் எங்களின் தேவையாகவும் இருந்தது. தெருமுனை, பொதுக் கூட்டங்களுக்கு நன்கொடை பெறுவது வேறு; இந்த அனுபவம் பெரிதினும் பெரிது.
இதை வழிநடத்தியது குற்றாலம் பயிற்சி முகாம் என்று கூட சொல்லலாம். 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெற்று சாதனை படைத்தது வருகிறது குற்றாலம். அந்த முயற்சியை திருநாகேஸ்வரத்திலும் ஏன் செய்யக் கூடாது என நினைத்ததன் பலன்தான் இது!
இந்த இயக்கத்தின் சிறப்பு!
இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனிப் பயிற்சிக்கு (டியூசன்) விடுவதைப் போல காலை அழைத்து வந்து, மாலை கூட்டி சென்றார்கள். இவர்கள் அனைவரும் ஆன்மீக வீட்டுக் குழந்தைகள். இந்த இயக்கத்தைப் பற்றி நன்கு அறிந்ததால் கொண்டு வந்து சேர்ந்தார்கள். குறிப்பாகப் பெண் குழந் தைகள் அதிகம். இங்கு சேர்த்தால் குழந்தைகளுக்கு சிந்திக் கும் ஆற்றல் கிடைக்கும், தன்னம்பிக்கை பெறுவார்கள் எனப் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இதை விடப் பெருமை நமக்கு வேறேது!
இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவு கூர வேண்டும். திராவிட மாடல் விளக்கக் கூட்டத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் திருநாகேஸ்வரம் வந்தார்.
தலைமுறைகள் கடந்த தலைவர்!
“தலைமுறை இடைவெளி இல்லா இயக்கத் தலைமைக் கண்ட ஆசிரியர் அவர்களே வருக! வருக!!” என மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினோம். அரசியல் கட்சி நண்பர்கள் பலரும் இதற்கு விளக்கம் கேட்டார்கள்.
என் தாத்தா ஏ.வி.ரமணி அவர்கள், ஆசிரியர் அவர் களைச் சிறிய வயதில் அழைத்துக் கூட்டம் போட்டார்.
பின்னர் எனது அப்பா குடி அரசு அவர்கள், ஆசிரி யரைத் தலைவராக ஏற்று செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து எனக்கும் தலைவர் ஆசிரியர் தான்! எங்கள் பிள்ளைகளுக்கும் ஆசிரியரே தலைவர்! ஆக நான்கு தலைமுறை ஆசிரியர் எங்கள் தலைவர்!
எங்கள் குடும்பம் மட்டுமல்ல; இதே பகுதியில் சட்ட எரிப்பு வீரராக இருக்கும் அய்யா அ.மொட்டையன் பெரியார் காலத்தில் செயல்பட்டு, பின்னர் ஆசிரியரைத் தலைமையாக ஏற்றவர். பின்னர் அவரது மகன், அதன் பின்னர் அவரது பெயரப் பிள்ளைகள் என வாழையடி வாழையாகத் தொடர்கிறது. இப்படித் தலைமுறை தலை முறையாக இருப்பவர்கள் பட்டியலைத் தமிழ்நாடு முழுக்க எடுக்க வேண்டும்!
பெரியாரியல் ஒரு பாடம்!
இந்தப் பயிற்சிப் பட்டறையில் கூட இரண்டு, மூன்று, நான்கு தலைமுறைகள் கொண்ட குடும்பத்துப் பிள்ளைகள் கணிசமாகக் கலந்துள்ளனர்! தொடர்ந்து இதுபோன்ற பழகு முகாம்களை நடத்திட வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது!
ஆம்! மக்களை அணுகுதல், குழந்தைகளை அணுகுதல் என்கிற வகையில் எங்களுக்கும் இது ஒரு பெரியாரியல் பாடம்தான்” என கும்பகோணம் மாவட்டக் கழகத் தோழர்கள் சார்பாக கு.நிம்மதி தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பயிற்சி வகுப்புகள்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திருவிடைமருதூர் ஒன்றி யத் தலைவர் எம்.என்.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கு.நிம்மதி தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் சு.துரைராஜ், துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், அமைப்பாளர் வ.அழகுவேல், மாவட்ட மகளிரணி தலைவர் மு.திரிபுரசுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், குடந்தை நகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘‘அறிவியலும் மூடநம்பிக்கையும்” தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன், ‘‘சமூக ஊடகங்களில் நமது பங்கு” எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி மற்றும் வி.சி.வில்வம், ‘‘சமூக நீதி வரலாறு” எனும் தலைப்பில் கோ.கருணாநிதி, ‘‘கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம்” எனும் தலைப்பில் முனைவர் க.அன் பழகன், ‘‘தந்தை பெரியாரின் இன்றைய தேவை” எனும் தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
சான்றிதழ் வழங்குதல்
நிறைவாக பல ஊர்களிலும் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம், அதற்காக கழகத் தோழர் கள் எடுத்து வரும் அபரிதமான முயற்சி, மாணவர்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு உள்ளிட்ட கருத்துகளை மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யின் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் எடுத்துக் கூறினார்.
மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் பகிர்ந்து, மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி, நூல்களும் பரிசளித் தனர். வகுப்புகளை நன்கு கவனித்து, சிறப்பாகக் குறிப் பெடுத்த மகாலட்சுமி, மணிகண்டன், பாரதி பாராட்டப் பட்டனர். திராவிடர் மாணவர் கழகப் பொறுப்பாளர் பா.ச.அருண்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி சிறக்க உழைத்தவர்கள்
திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என். கணேசன், மாவட்டத் தலைவரோடு இணைந்து பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். மேலும் ஒன்றியச் செயலாளர் ந.முருகானந்தம், மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, செயலாளர் சு.துரைராசு, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்ட அமைப்பாளர்
வ.அழகுவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் க.சிவக்குமார், சு.விஜயகுமார், மாவட்ட மகளிரணி தலைவர் திரிபுர சுந்தரி, திருவிடைமருதூர் தெற்கு செயலாளர் சங்கர், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.தமிழ்மணி, குடந்தை ஒன்றியத் தலைவர் ஜில்ராஜ், குடந்தை மாநகரத் துணைச் செயலாளர் ந.காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலர் து.சரவணன், மாநகரச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய அமைப்பாளர்
அ.சிவக்குமார், சோழபுரம் அ.மதியழகன், வலங்கைமான் ஜீவராணி, மகளிரணி குடந்தை தலைவர் அம்பிகா, திருநாகேஸ்வரம் நகரத் தலைவர் மொட்டையன், குருமூர்த்தி, த.அம்பிகாவதி, வழக்குரைஞர் ச.சக்திவேல், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சேதுராமன், திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் க.மோகன், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் க.பவானி சங்கர், பட்டீஸ்வரம் போட்டோ மகாதேவன், பவுண்டரீகபுரம் அறிவுமணி முருகேசன், குடந்தை நகரத் துணைத் தலைவர் நா.காமராஜ், திருவிடையமருதூர் ஒன்றியத் தலைவர் முருகேசன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் சி.தில்லைகரசி, திருநாகேஸ்வரம் மகளிர் பாசறை சி.கண்மணி, சி.கனிமொழி, சங்கீதா, திருநாகேஸ்வரம் திராவிடர் மாணவர் கழகம் க.மதுவந்தி, மொ.பாலகுரு.