கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிகளை மீறியதால் நடவடிக்கை

1 Min Read

மதுரை, ஜூன் 28 மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் இரண்டு கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் இயங்கியது தெரியவந்தது. இதேபோல் இந்த கல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஆழத்திற்கு விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து, ஒரு கல் குவாரியின் உரிமையாளர் ஆனந்த்சிவாவுக்கு ரூ.7 ேகாடியும், மற்றொரு குவாரியின் உரிமையாளரான இன்பராஜூக்கு ரூ.8 கோடியும் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட தொகைக்குரிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *