அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி- வினா கால அட்டவணை வெளியீடு

1 Min Read

சென்னை, ஜூன் 27- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினிவழியில் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக் கான வினாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.
அதன்படி முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18ஆம் தேதி வரை யும், 2ஆம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18ஆம் தேதி வரையும், 3ஆவது கட்டமாக நவம்பர் 3 முதல் 14ஆம் தேதி வரையும், 4ஆம் கட்டமாக ஜனவரி 27 முதல் 30ஆம் தேதி வரையும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த வினாடி-வினாவுக்கான வினாத்தாளை தந்த வகுப்பாசிரியர் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும், மதிப்பீடு முடிந்தபின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாக பின்பற்றி போட்டிகளை சிறந்த முறை யில் நடத்தி முடிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *