ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரிய கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான (முதுமக்கள்) தாழிகள் – வெண்கல வளையல்கள்

2 Min Read

அரசியல்

தூத்துக்குடி,ஜூன்20 – பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முது மக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண் கல பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.

தொடர்ந்து அங்கு ஒன்றிய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் ‘சைட் மியூசியம்’ அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட் களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிறிய தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய் தனர். 30 செ.மீ. அகலம், 58 செ.மீ. உயரம் கொண்ட அந்த முதுமக்கள் தாழியில், குழந்தையின் மண்டை ஓடு, கை எலும்புகள் இருந்தன. மேலும் 4 வெண்கல வளையல்களும் இருந்தன. அவற்றில் இரு 4 அடுக்கு வெண்கல வளையல்களும் கிடைத்தன. அவற்றை அணியும் குழந்தை வளர்வதற்கு ஏற்ப வளை யலும் தானாக விரிவடையும் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இவை 3.5 செ.மீ. விட்டமும், 0.2 செ.மீ. கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.

குழந்தைக்கான (முதுமக்கள்) தாழியில் சில பொருட்களும் இருந்தன. அதன் வாய்ப் பகுதியில் விரல் தடம் பதிந்து இருந்தது. வெண்கல வளையலா னது உயர் வெள்ளீயம் கலந்து தயாரிக்கப் பட்டு இருந்தது. முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்டு இருந்த குழந்தைக்கு 5 முதல் 8 வயது வரையிலும் இருக்கலாம் என்றும், முதல் முறையாக குழந் தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கிடைத் துள்ளதாக தொல்லியல் துறை யினர் தெரிவித்தனர்.

இதேபோன்று மற்றொரு முது மக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்தனர். அதில், வயது முதிர்ந்த வரின் மண்டை ஓடு, கை கால் எலும்புகள் இருந்தன. மேலும் குவளை, கிண்ணம், தட்டு போன்ற மண்பாண்ட பொருட்களும், 2 வெண்கல வளையல்களும் இருந் தன. வெண்கல வளையல் ஒவ் வொன்றும் 5.5 செ.மீ விட்டமும், 0.5 செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.

அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் விரைவில் அமைய வுள்ள அருங்காட்சியகத்தில் காட் சிப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *