பேருந்தில் முதியவர்களுக்கு கட்டணமில்லா பயணம் – விண்ணப்பிக்கலாம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஜூன்20 – முதியோருக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, வரும் 21ஆம் தேதி முதல் விநியோகிக்கப் படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையை சேர்ந்த 60 வய துக்கு மேற்பட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படு கின்றன.

நடப்பாண்டின் இறுதி அரை யாண்டுக்கு ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக் குரிய பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு டோக்கன் வழங்குதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 21ஆம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 40 மய்யங்களை நேரில் அணுகலாம்.

ஜூலை 31ஆம் தேதி வரை அலு வலக நாட்களில் நாள் தோறும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை கட்டண மில்லா பயண டோக்கன்கள் வழங்கப் படும். பயண டோக்கன்களை புதிதாக பெற விரும்புவோர் குடும்ப அட்டை நகலுடன், வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவிலான ஒளிப் படங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் அசலை கையில் வைத் திருக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *