மின்மோட்டரில் ‘கார்பன் நானோ குழாய் காயில்கள்’

1 Min Read

உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் தென் கொரியாவின், கே.அய்.எஸ்.டி., நிலைய விஞ்ஞானிகள்.

மோட்டார் காயிலுக்கு, கனமான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிச் சுருள்களுக்குப் பதிலாக, கார்பன் நானோகுழாய்களைக் (Carbon Nanotubes) கொண்டு உருவாக்கப்பட்ட கம்பிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.

இவை மிகவும் இலகுவானவை. உறுதியானவை. அதோடு வளையும் தன்மை கொண்டவை. இந்த நானோகுழாய் கம்பிகள், தாமிரக் கம்பிகளைவிட 80 சதவீதம் வரை எடை குறைந்தவை. குறைவான எடை இருப்பது, மின்சார வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய பயன்பாடு கொண்டவை. உதாரணமாக, ஒரு விமானத்தில், கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கிய மோட்டார்களை பயன்படுத்தினால் பல நூறு கிலோ எடையை குறைக்க முடியும்.

தற்போதைக்கு கார்பன் நானோகுழாய் காயில்களின் மின் கடத்தும் திறன் தாமிரத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. எனினும், எடை குறைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை, இதை ஒரு சிறந்த மாற்றாக முன்னிறுத்துகின்றன.

உலோக காயில் இல்லாத மோட்டார்கள், இலகுரக மின்சாரவாகனங்களுக்கு விரைவில் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *