இணையேற்பு நிகழ்வு

0 Min Read

அரசியல்

 தஞ்சாவூர், மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் – அமுதா இணையரின் மகள் ஆர்த்தி, மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ராமன் -சின்னமணி இணையரின் மகன் அரவிந்த் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் நடத்தி வைத்தார். நிகழ்வில் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, க.கலைமணி, சோ.சுரேஷ், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் த.பரிதின், தேனி முருகேசன், வைரமுத்து, விஜயகுமார், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (சென்னை, 20.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *