மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!

1 Min Read

சூனியம் செய்ததாகக் கூறி கணவன், மனைவியை 

மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

அரசியல்

சங்கரெட்டி, ஜூன் 20- தெலங்கானாவின் சங்கரெட்டியில் சூனியம் செய்ததாகக் கூறி கணவ னையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த நிகழ்வு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த காட்சிப்பதிவில் கணவன் — மனைவி மரத் தில் கட்டப்பட் டிருப்ப தையும் கிராம மக்கள் அங்கு கூடியிருப்பதையும் காண முடிகிறது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு சதாசிவப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்குரு கிராமத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படுகி றது.

யாதையா மற்றும் அவரது மனைவி ஷியா மம்மா இருவரும் சூனியம் செய்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து கிராம மக் களில் சிலர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து அவர் களை இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள் ளனர். இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இணையரை மீட்டனர்.

அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு வதாகவும் காவல்துறை ஆய்வாளர் நவீன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *