திருச்சி காட்டூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்

viduthalai
1 Min Read

திருச்சி, ஜூன்24 திருச்சி காட்டூரில் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம் ஜூன் 21 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காட்டூர் இளைஞரணி ச.விஜய்யோகானந்த் வரவேற்புரையாற்றினார். காட்டூர் பகுதி தலைவர் ரெ.காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட் மகளிரணி தலைவர் ரெஜினா பால் ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி சுரேஷ், மகளிர் பாசறை துணை செயலாளர் ரூபியா ஸ்டாலின், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அம்பிகா கணேசன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் ராஜேந்திரன், திருவெறும் பூர் நகர தலைவர் சிவா னந்தம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், அன்பழகன் (தி.மு.க), பொய்யாமொழி (தி.மு.க) ஆகியோர் முன் னிலை வகித்தனர். கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்பு ரையாற்றினார்.

இக்கூட்டத்தில் ராஜ ரெத்தினம், மெல்வின்பிரபு, ப.க. மாவட்ட தலைவர் மதிவாணன், குத்புதீன், திருவரங்கம் நகர தலைவர் ச.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர், விடுதலை செல்வம், பன்னீர்செல்வம், ஆரோக்கியசாமி, ஜெயில் பேட்டை தமிழ்மணி, திருவரங்கம் நகர துணைத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் இரா.முருகன், அந்தோணி, வாழவந்தான் கோட்டை தலைவர் விஜய்ராகவன், துவாக்குடி நகர தலைவர் விடுதலை கிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறை சங்கீதா, மகளிரணி இரா.பேபி, ஸ்டாலின் பால்ராஜ், பாச்சூர் அசோகன், பெல் திராவிடர் தொழிலாளர் சங்க தோழர்கள் ஆண்டிராஜ், அசோக்குமார், முத்து (தி.மு.க), மன்சூர் அலி (தி.மு.க), பெரியார் பிஞ்சுகள்: யாழ் கண்மணி, யாழிசை, நிலவெழிலன், இமயவரம்பன், மகிழினி, யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் ம.சங்கிலிமுத்து நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *