பழனி-அமரபூண்டியில் புதிய கிளைக் கழகம் தொடக்கவிழா!

viduthalai
1 Min Read

பழனி, ஜூன் 23 பழனி அருகே உள்ள அமரபூண்டியில் 22.6.2025 அன்று மாலை 6 மணிக்கு புதிய கிளைக் கழகம் தொடக்கவிழா எழுச்சியோடு நடைபெற்றது.

கிளைக் கழக தலைவர் பி.சுப்ர மணியன் தலைமைவகித்தார்.செயலாளர் ஆர்.மாரிமுத்து முன்னிலை வகித்தார். தொடக்கத்தில் பழனி.சு.அழகிரிசாமியின் மந்திரமா?  தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாகவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் 91ஆம்ஆண்டு சிறப்பினையும், விடுதலையின் ஆசிரியராக 63 ஆண்டுகளாக ஆசிரியராக தொண்டாற்றும் வரலாற்று பெருமையினை விளக்கி உரையாற்றினார். சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் பி.பாலசுப்ரமணியன், செயலாளர் ஆர்.மாரிமுத்து இருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.  மாவட்டத்தலைவர்மா.முருகன், மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டிணன்,  மாவட்ட துணைச்செயலாளர் வழக்குரைஞர் ஆர்.பி.ஆனந்தன், மதியழகன் கருத்துரையாற்றினார்கள்.

பழனி நகர தலைவர் சி.இராதா கிருட்டிணன்,  செயலாளர் மு.செந் தில் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.பாலன், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர்ரெ.இரஞ்சித்குமார்ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். மாணவர் கழகம் மாயவன் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *