இன முரசு சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 25 சென்னை யில் நேற்று (24.6.2025) நடைபெற்ற விசிகவின் விருதுகள் வழங்கும் விழாவில், மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ஆண்டுதோறும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சமூகம், அரசியல் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிய ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, முன்னிலை வகித்த விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வரவேற்புரை யாற்றினார். அப்போது, அமெரிக் காவை சேர்ந்த ஆய்வு மாணவர் மைக்கேல் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட விசிக குறித்த புத்தகத்தை ரவிக்குமார் திருமாவளவனிடம் வழங்கினார். விசிக பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் நோக்கவுரையாற்றினார்.

விழாவை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். விருதாளர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்த தகுதி யுரையை வாசித்த திருமாவளவன், 7 பேருக்கான விருதுகளையும் வழங்கினார். அதன்படி, ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கே.எஸ். சலமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது, நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராசர் கதிர்’ விருது, பவுத்த ஆய்வறிஞர் பா.ஜம்புலிங்கத்துக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகுவுக்கு ‘மார்க்ஸ் மாமணி விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலை வர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவிக்கு ‘காயிதேமில்லத் பிறை’ விருது, யாழ்ப்பாண தமிழறிஞர் அ.சண்முகதாஸுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருது ஆகியவை வழங்கப் பட்டன.

தொடர்ந்து, திராவிடம் குறித்து எழுதிய புத்தகத்தை திருமாவளவனிடம் கே.எஸ்.சலம் வழங்கினார். இதையடுத்து விருதாளர்கள் ஏற்புரையாற்றினர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *