விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம்

1 Min Read

செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர் 10 விடுதலை சந்தாக்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். செந்துறை மதியழகன் உடனிருந்தார்.(20.11.2023, பெரியார் திடல்).

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது சுயமரியாதை நாளினை முன்னிட்டு திண்டுக்கல் வருகை தந்த கழக தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர் மற்றும் கருப்பட்டி ரவி ஆகியோரிடம் திண்டுக்கல் மாவட்டதலைவர் இரா. வீரபாண்டியன் 20 சந்தாக்களும். மாவட்ட செயலாளர். வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், மாவட்ட இணை செயலாளர் கே.ஆர்.காஞ்சிதுரை, வத்தலகுண்டு பொறுப் பாளர் சக்திவேல், நிலக்கோட்டை ஜெயபிரகாஷ், சரவணன் ஆகியோர் தலா 10 சந்தாகளும். மாவட்ட ப.க.தலைவர் செல்வம், நகராஜன், சின்னாளப்பட்டி நாகேந்திரன், வத்தல குண்டு சுந்தர் ஆகியோர் தலைவர் 5 சந்தாக்களும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

பகுத்தறிவாளர் கழகத் தோழர் மதிக்கண்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.

கு.சரவணன் ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர்  ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.

பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்  இரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர்  ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.

தருமபுரி மாவட்டத் துணைத் தலைவர் பாப்பாரப்பட்டி இளைய மாதன் ஒரு ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *