அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 24- திருவான்மியூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடப்பதாக சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நேரடி மணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரா னிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட் ஆகிய 4 தொழில் பிரிவுகளில் பயிற்சி  நடைபெற்று வருகிறது.

கிண்டி தொழிற்பயிற்சி மய்யம்

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற (அ) தோல்வியுற்ற மாணவ, மாணவியர்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்ற வருகிறது. இந்நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி (மகளிர்) வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரை நேரடியாக அணுகலாம்.

உதவித் தொகை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைத்து மாணவ/ மாணவியருக்கும் ஒன்றிய மாநில அரசு நிறுவனங்களில் (என்ஏசி) பயிற்சி ஏற்ப டுத்தி தரப்படும். மேலும் முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லா பயிற்சி, மாதாந்திர உதவித் தொகையாக ரூ-750 (அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000) கூடுதலாக உதவித் தொகை வழங்கப்படும், மிதி வண்டி, பேருந்து பயணச் சலுகை, பாடப்புத்தகம்,சீருடைகள் மற்றும் வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்கள் அறிய 9159162630, 8122128123, 7200032621, என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *