சென்னை, ஜூன் 24- கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.41ஆயிரம் கோடியில் சாலைப் பணிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாலை மேம்பாட்டு திட்டம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை வசதிகள் மிக மிக முக்கியம். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அரசு சாலை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
2021ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள 4 வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள 4 வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட் டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
உயர்மட்டப் பாலம்
ரூ. 17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. ரூ.731கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்திற்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
ரூ.2,074 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கி 6,805 கி.மீ. நீள சாலைகளில் ஓடுதள பரப்பினை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப் பட்டு உள்ளன.
ரூ.4,907.17 கோடி மதிப்பீட்டில் 5,064 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு சாலை உள் கட்ட மைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், வண்டலூர் – வாலாஜாபாத் சாலை 4 வழித்தடத்தில் இருந்து ஆறு வழித் தடச் சாலையாக ரூ.180.09 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப் பட்டு உள்ளது. ரூ.1,372 கோடி மதிப்பீட்டில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
41 ரயில்வே மேம்பாலம்
இதுதவிர மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புறவழிச் சாலைகள், உயர்மட்ட சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.621 கோடி மதிப்பில் முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணி, ரூ.190 கோடி மதிப்பில் மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம். ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மதுரை-தொண்டி சாலையில் சாலை மேம்பாலம்.
ரூ.2,105.49 கோடி மதிப்பீட்டில் 41ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
பெருநகர வளர்ச்சித்திட்ட பணி
சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட பணியின் கீழ் ரூ.590.51 கோடி மதிப்பில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. ரூ.60.69 கோடி மதிப்பீட்டில் சென்னையில் சர்தார் படேல் சாலையுடன் ராஜீவ்காந்தி சாலை இணையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் சாலை மேம்பாலம்,
ரூ.314.48 கோடி மதிப்பீட்டில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ரூ45.50 கோடி மதிப்பீட்டில் மடிப்பாக்கம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி, ரூ.30.67 கோடி மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, செந்தில் நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 2 நடை மேம்பாலங்கள்,
ரூ.139.17 கோடி மதிப்பீட்டில் உள்வட்ட சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை அகலப் படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப் பணிகளாக நடை பெற்று வருகின்றன.
ரூ.41 ஆயிரம் கோடிக்கு சாலைப்பணி
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.41 ஆயிரம் கோடிக்கு சாலைப் பணிகள் நடந்துள்ளன. இதன் காரணமாக, இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் என்ற புதிய வரலாறை படைத்து வருகிறது.