வருந்துகிறோம்

viduthalai
1 Min Read

திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றும், இயக்கம் நடத்திய பல மாநாடுகளில் கலந்து கொண்டும் பெங்களுருக்கு வரும் ஆசிரியர் மற்றும் கழக முன்னணியினர், தோழர்களை வரவேற்றும் உபசரித்த கொள்கை வீராங்கனையும், கருநாடக மாநில திராவிடர் கழக மேனாள் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி ப.பாண்டியனின் வாழ்விணையரும், ஒசூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணியின் அன்புத் தாயாரும், ஒசூர் மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தனின் மாமியாருமான கோ.இளஞ்சியம் (வயது 74) திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு நேற்று திருச்சியில் (23.06.2025) இரவு மருத்துவமனையில் 10.45 மணிக்கு மறைவுற்றார்.அவரது இறுதி நிகழ்வு திருச்சி பாலக்கரை எடத்தெருவில் இருந்து எந்தவித மூடசடங்குமின்றி இன்று (24.06.2025) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.
தோழர்கள் கண்மணி, வனவேந்தன் ஆகியோரிடம் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *