சென்னை, ஜூன்.24- தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் உரு வாக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச் சர் டி. ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார்.
அமைச்சரின் பதில்
அன்னிய முதலீட்டில் ஆமை வேகம் என்று தி.மு.க. அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
அவருடைய இந்த விமர்சனத்துக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா பதில் அளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி பா.ஜனதாவின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமை மிக்க பண்பாட்டு கருவூலமான கீழடி விவகாரத் திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் விரோதநிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி தக்க பதிலடி கொடுத்தது.
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் பாய்ச்சலையும், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் படுதோல்வியையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி யின் அவதூறு வேலையையும் பரப்பும் அவரே கையில் எடுத்து கொண்டுள் ளார். முதலமைச்சரின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார். அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அன்னிய நேரடி முதலீடு எண்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போதே நான் விளக்கம் அளித்திருந்தேன்.
பல சிக்கல்கள்
அன்னிய நேரடி முதலீடுகளை கணக்கிடுவதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. எனவே தான் பொருளாதார நிபுணர்கள் அதை மாநிலத்தின் வளர்ச்சிக்கான சரியான குறியீடாக ஏற்றுக்கொள்வதில்லை. இத்தகைய நிலையிலும் தமிழ்நாடு இந்தியாவின் முதலீட்டில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளதுடன் தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
முதலமைச்சர் கூறியது போன்று நமது நியாயமான முதலீடுகளை பிற மாநிலங்களுக்கு திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு மிக தீவிரமாக இருக்கிறது. அதற்காக தன் அதிகார பலத்தை பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் கண்டன அறிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும்.
ரூ.10 லட்சம் கோடி
அ.தி.மு.க.வின் 2016-2021 காலக்கட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றதாக அவர் கூறுகிறார். திராவிட மாடல் அரசு தனது ஆட்சிக்காலமான இந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும், 31 ரூ லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தவறான அறிக்கைகளை வெளியிட்டு அரசியலில் கவனம் முதலமைச்சரின் கீழ் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்று இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அளித்த நேர்காணலின் தரவுகளை கூட சரியாக புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.