சென்னை, ஜூலை 23 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிர மணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக
எச்.ராஜாவுக்கு காவல்துறை தாக்கீது அனுப்பியது.
இந்த தாக்கீதை எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (23.6.2025) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய தாக்கீதை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்றும், விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அனுப்பிய தாக்கீதை எதிர்த்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.