சென்னை, ஜூன் 23- தந்தை பெரியார் சுயமரியாதை உணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், வர்ணா சிரமம் ஒழிக்கப்பட்டு ஜாதி பேதம் நீக்கப்படவும், பெண்ணடிமை ஒழிக்கப் பட்ட சமத்துவம் உருவாக்கவும், மூடநம் பிக்கைகள் ஒழிக்கப்பட்ட அறிவெழுச்சி சமுதாயம் மலரவும் பல ஏடுகளையும், புத்தகங்களையும் கொள்கைப் பிரச் சாரத்தை மட்டுமே மய்யமாகக் கொண்டு வெளியிட்டார்கள்.
பதிப்பகங்கள்
உருவான வரலாறு
அதற்கு ஏதுவாக தந்தை பெரியார் – ‘குடிஅரசு பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், விடுதலை வெளியீடு, பகுத்தறிவு வெளியீடு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, உண்மை நாடுவோர் சங்கம், பெரியார் ஆவணக் காப்பக வெளியீடு, பெரியார் பிஞ்சு வெளியீடு’ என பதிப்பகங்களைத் தொடங்கினார்கள்.
கருத்தரங்கம்
96 ஆண்டுகளைக் கண்ட அப்பதிப்பகங்களின் மாண்பினைப் போற்றும் விதமாக 22.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் “96ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள் – கருத்தரங்கம்” சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் – இயக்குநர் தோழர் இரா.முத்தரசன், எழுத்தாளர் ஞா.சிவகாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
புத்தகம் வெளியீடு
தந்தை பெரியார் கண்ட பதிப்பகங் களின் 96 ஆண்டு கால தொண்டை எடுத்துக்கூறும் “தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி” புத்தகத்தை தோழர் இரா.முத்தரசன் வெளியிட, மலேசிய திராவிடர் கழகத்தின் பேராக் மாநில செயலாளர் இரா.கோபி அப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். நிகழ்வுக்கு வந்திருந்த தோழர்கள் பலரும் தமிழர் தலைவரிடமிருந்து அந்நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்பு
தோழர் இரா.முத்தரசன், எழுத்தாளர் ஞா.சிவகாமி ஆகியோருக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். இயக்க வெளியீடு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண் டுள்ள மலேசிய திராவிடர் கழகத்தின் பேராக் மாநில செயலாளர் கோபி மற்றும் சுங்கை சிம்புட் பகுதிக் கழகத் தோழர்கள் 12 பேர் இந்நிகழ்விற்கு வந்திருந்தனர். அத்தோழர்களின் சார்பில் இரா.கோபி ஏற்புரையாற்றினார்.
திருச்சி – சிறுகனூர் பெரியார் உலகம் மற்றும் கழக நிறுவனங்களைப் பார்வையிட்டு மகிழ்ந்த அத்தோழர்கள் அனைவருக்கும் இந்நிகழ்வில் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். ‘‘தந்தை பெரியார் வாழ்க்கை குறிப்புகள்” புத்தகத்தை நினைவுப் பரிசாக ஆசிரியர் அவர்கள் அத்தோழர்களுக்கு வழங்கினார்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் துரை. முத்துக்கிருட்டிணன் பெரியார் உலக நன்கொடை ரூபாய் ஒரு இலட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜெ.குமார் ரூ.அய்ந்தாயிரம் பெரியார் உலக நன்கொடையை தமிழர் தலை வரிடம் வழங்கினார். எழுத்தாளர் ஞா.சிவகாமி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
பங்கேற்றோர்
கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில தகவல் தொழிற்நுட்பவியல் அணி – ஊடகவியலாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், புலவர் பா.வீரமணி, மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் நா.பார்த்திபன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், வழக்குரைஞர் துரை.அருண், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொறியாளர் ச.இன்பக்கனி, கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பி.சி.ஜெயராமன், கோ.வீ.இராகவன், தி.செ.கணேசன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிறைவாக கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றியுரையாற்றினர்.