பன்னாட்டுக் கடிதம் எழுதும் போட்டி தமிழ்நாட்டு மாணவியர் வாகை சூடினர்

1 Min Read

சென்னை, ஜூன் 22- பன்னாட்டு அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், தமிழ்நாடு அளவில் மூன்று பள்ளி மாணவியர் வெற்றி பெற்று பரிசை தட்டிச் சென்றனர்.

அஞ்சல் துறையின், ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’ சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான பன்னாட்டு கடிதம் எழுதும் போட்டி, பல்வேறு கருப்பொருள்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 9 – 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ – மாணவியர் இதில் பங்கேற்பர்.

இந்தாண்டு நடத்தப்பட்ட போட்டியில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலிருந்து 8,096 பேர் பங்கேற்றனர். இதில், மூன்று மாணவியர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முதல் பரிசு பெற்ற விருதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அனிஷாவுக்கு, 25,000 ரூபாய்; இரண்டாம் பரிசு பெற்ற கோவை ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா மேனனுக்கு, 10,000 ரூபாய்; மூன்றாம் பரிசு பெற்ற பண்ருட்டி, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வேதாஸ்ரீக்கு, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன.

தேசிய அளவில் வெற்றி பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஹராதி, 50,000 ரூபாய் பரிசு பெற்றுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *