இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பினர்

1 Min Read

சென்னை, ஜூன் 22- அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.
இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர். பலமுறை இந்த விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (22.6.2025) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விண்வெளிப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பி உள்ளனர் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *