அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 21 – செந்தில் பாலாஜி யைக் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கள், ஒருவர் சிகிச்சையில் இருக்கும் போது எப்படி அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்று கூறி அமலாக்கத்துறைக்குக் கண் டனம் தெரிவித்து அமலாக்கத் துறையின் கோரிக்கையை நிரா கரித்துவிட்டன

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வில் இன்று (21.6.2023) நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் ஆஜாகி செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது, ஆட்கொணர்வு மனுத்தாக் கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தர வுக்கு முரணானது என வாதிட் டார்.

அதையடுத்து அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட் கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்றும், ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கக் கூடாது என்றும், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மருத்துவமனை யில் சிகிச்சைக்காக இருக்கும் ஒரு வரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிக்கிறது என்றும், மருத்துவமனையில் உள்ளபோது மருத்து வர்கள் கருத்தைக் கொண்டு தான் விசாரணை நடத்த முடியும் என வும் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் அமைச்சரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் என்றும், தற்போ தைய நிலையில், ஒருவர் மருத்துவ மனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இறுதியில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான அமலாக்கத் துறையின் மேல்முறை யீடு மனுக்கள் மீதான விசார ணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர். 

ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்த பின் நாங்கள் விசாரிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை உச்சநீதி மன்றம் முற்றாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *