சென்னை, ஜூன் 21 இதுவரை பேருந்து வசதி கிடைக்காத 1 கோடி கிராமப்புற மக்கள் மினி பஸ் திட்டத்தால் பயன் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மினி பஸ் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 16ல் தொடங்கி வைத்தார். மினி பஸ் திட்டத்தால் 3,103 வழித்தடங்களில் 90 ஆயிரம் கிராமங்களில் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.