மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூன் 21- மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுச்சீட்டு

சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு கடவுச்சீட்டு கோரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், தானும் பிரிந்துவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கணவரின் கையெழுத்தை கோராமல் தனது கடவுச்சீட்டு விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், திருமணமான பெண், கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ பெற வேண்டிய அவசியம் இல்லை. கணவரின் கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்ற கடவுச்சீட்டு அதிகாரியின் போக்கு ஒரு பெண்ணை கணவரின் உடமையாக கருதும் ஆணாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.

திருமணமாகி விட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவது இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட கணவரிடமிருந்து மனைவி கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாத காரியம். எனவே, மனுதாரருக்கு 4 வார காலத்துக்குள் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *