பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்

1 Min Read

சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 21 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இதற்கான 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18ஆம் தேதி வெளியாகிறது. கலந்தாய்வு ஜூலை 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஆணை ஜூலை 28ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 6ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *