செந்தில் பாலாஜி கைது பிரச்சினை அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் தாக்கீது

1 Min Read

சென்னை, ஜூன் 21 – தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

செந்தில் பாலாஜியை கைது செய்த போது மனித உரிமை கள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசனிடம் கைது செய்யப்பட்டபோது தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில், மனித உரிமை மீறல் புகார் குறித்து அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் ஆறு வாரத்தில் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *