ஆவடி நகர பகுதி கலந்துரையாடல்

1 Min Read

ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர பகுதி கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு பல்லவன் நகரில் உள்ள ஆவடி நகர கழக துணை செயலாளர் கண்ணன் இல்லத்தில் நகர தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட கழக தலைவர் கார்வேந்தன், செயலாளர் இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கழக வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் தமிழ்மணி, துணை செயலாளர் வஜ்ரவேல், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் கார்த்திக்கேயன், ஜெயராமன் ப.க., மகளிரணி தோழர்கள் எல்லம்மாள், சுகந்தி, பூவை லலிதா மற்றும் பெரியார் பிஞ்சுகள் நன்னன், இனியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கூட்டத்தில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் ஆவடி பெரியார் மாளிகையில் மாண வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் புத்தகம் வாங்கி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நகர செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *