தமிழ் மீனவர்களை தாக்கி மீன்களை அள்ளிச் சென்றனர் இலங்கை கடற்படையின் அராஜகம் நீடிக்கிறது

viduthalai
1 Min Read

ராமேசுவரம், ஜூன்.20– மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 மாதத்திற்கு பிறகு ராமே சுவரத்தில் இருந்து கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.

தமிழ் மீனவர்கள்மீது தாக்குதல்

இதில் ராமேசுவரத்தை சேர்ந்தரோஸ் என்பவ ருக்கு சொந்தமான விசைப் படகில் பிரபு, ரோஸ், சஞ்சய், ராஜா, பூபதி ராஜா உள்ளிட்ட 8 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர்.

இந்த மீனவர்கள் நடுக் கடலில் மீன்பிடித்தபோது திடீரென வலையானது படகின் அடிப்பகுதியில் உள்ள புரொபலர் என்ற கருவியில் சிக்கி படகு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், அந்த படகில் ஏறி 8 மீனவர்களையும் முட்டி போட வைத்து தாக்கியதாக தகவல் வெளியானது.

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து உயிர் தப்பி வந்து மீனவர்கள் கூறியதாவது:-

படகின் அடியில் சிக் கிய வலையை சரிசெய்த நேரத்தில் ரோந்து கப்ப லில் வந்த இலங்கை கடற் படையினர் திடீரென படகில் ஏறிவிட்டனர். எங்களை முட்டி போட வைத்து தாக்கினார்கள். படகில் இருந்த ஏராள மான மீன்களையும் பொருட் களையும் அள்ளிச் சென்று விட்டனர். இலங்கை கடற்படையினர் சென்ற பின்னர் நாங்கள் படகு டன் வேகமாக கரை திரும் பினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினர் ராமேசு வரம் மீனவர்களை தாக்கி, மீன்களை அள்ளிச்சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக் கோட்டை மீனவர்களை யும் இலங்கை கடற்படை யினர் தாக்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *