ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு இரண்டாவது கட்ட பட்டியல் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 20 டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வில் (நேர் காணல் உள்ள பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான 2-ஆவது கட்ட நேரடி சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர் வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www. tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. அக்காலியிடங்களில் துணை மேலாளர் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் (நிதி), கணக்கு அலுவலர், மேலாளர் (கிரேடு-3), முதுநிலை அலுவலர் (நிதி), மேலாளர் (மெக்கானிக்கல்), மேலாளர் (எலக்ட்ரிக்கல்), துணை மேலாளர் (பொருட்கள்), உதவி மேலாளர் (மார்க்கெட்டிங்) உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், ஒருங்கிணைந்த குருப்-1 தேர்வில், முதன்மைத் தேர்வு கணினி வழியில் கடந்த ஆண்டு டிச. 10 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
அத்தேர்வில் உள்ள காலியிடத்தை நிரப்பு வதற்கான 2-ஆவது கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *