கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

21.6.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமனம் செய்திடும் மசோதா பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேறியது.

* பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* தந்தை பெரியாரையும் அன்னை மணியம்மையாரை யும் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆளும் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என மணிப்பூரின் ஒன்பது பேர் கொண்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குழு பிரதமரிடம் மனு.

* ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் ம.பி. சாட்னா மாவட்ட ஆட்சியர் பங்கேற்றதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு. தவறில்லை என்கிறார் அந்த ஆட்சியர்.

தி இந்து:

* இந்தியாவில் உள்ள ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகளை பிரதமர் மோடியிடம் பேசுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 70க்கும் மேற்பட்ட அமெரிக்க செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *