மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

கன்னியாகுமரி, ஜூன் 19- கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சோப்பு அல்லது சானிடைசா் மூலம் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம். அத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும் நபா்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவா்களின் ஆலோசனை யின்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் அறிவுறுத் தல்களை பின்பற்றுவதன் மூலம் இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

சுகாதாரத் துறையின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *