புதுச்சேரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வெற்றிபெற பாடுபட்ட தோழர்களுக்கு பாராட்டு

viduthalai
2 Min Read

புதுச்சேரி, ஜூன் 18- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 14.6.2025 சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதிகூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் காப்பாளர் இர. இராசு, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், துணைத் தலைவர் மு. குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், நகராட்சித் தலைவர் மு.ஆறுமுகம், பெ. ஆதிநா ராயணன், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முனைவர்.சிவ.இளங்கோ நிறைவு விழா சிறப்பாக நடைபெற உழைத்த கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி இயக்கத்தின் செயல் பாடுகள் பற்றியும் சிறப்பாக செயல் பட வேண்டியதின் அவசியம் பற்றி யும் எடுத்துக் கூறினார். நிறைவு விழா வெற்றிபெற பாடுபட்ட தோழர் களுக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

08.06.2025 அன்று நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள் ளப்பட்டது.

நிறைவு விழா வெற்றிபெற பாடு பட்ட தோழர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு பொதுக் கூட்டம் புதுச்சேரி நகரப் பகுதியில் நடத்துவது.

கழகத் தோழர்கள் அனைவரும் சென்னை சென்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து குழுவாக படம் எடுத்துக் கொள்வதென்றும் அப் பொழுது பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவதென்றும் தீர்மானிக் கப்பட்டது.

நிகழ்ச்சியில் இரா. திருநாவுக்கரசு, கே.தனவந்தன். பி. அறிவுச்செல்வன், பானுமதி கண்ணன், செ. திவ்யா, செ. நிலானி, இள.கோவலன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாணவர் கழகத் தலை வர் சபீர் முகமது நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *