தூத்துக்குடி, ஜூன்18- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் 40ஆவது நிகழ்ச்சியாக முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
14.6.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் பெரியர் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையுரையுடன் விழா தொடங்கியது.
முதலாவதாகத் தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி மோ.அன்பழகன் “கலைஞரின் இலக்கிய ஆற்றல்” பற்றி எடுத்து ரைத்தார்.
அடுத்து மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன் ராஜ், “கலைஞர் போக்கு வரத்துறையில் செய்த அரிய சாதனைகளை”ப் பட்டியலிட்டு விளக் கினார்.
இறுதியாகக் கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம், கலைஞரின் மனிதநேயம் கொண்ட சாதனைகளான இதயம் காப்போம், உயிர் காக்கும் உயர் சிகிச்சைச் கான இலவச காப்பீடு, 108 மருத்துவ வாகனம், 48 மணி நேர அவசர சிகிச்சை, முதல் பட்டதாரி உயர்படிப்புக்கான சலுகை ஆகியவை பற்றிச் சான்றுகளுடன் தெளி வான விளக்கம் தந்தார்.
மேலும் பெரியாரின் சிந்தனைகளைக் கடுமை யான எதிர்ப்புகளிலும் நாடகம் எழுத்து, கவிதை, பேச்சு என மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்று கூறினார்.
சமத்துவபுரங்கள், விவ சாயிகள் மேம்பட உழவர் சந்தை, இலவய மின்சாரம், சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றியும் விரிவான விளக்கம் தந்தார்.
இறுதியாக மாவட்டத் திராவிடர் கழகச் செயலா ளர் கோ.முருகன் நன்றிகூற நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் கி.கோபால்சாமி, மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் செ.செல்லத்துரை, கவிஞர் கோ.இனமுருகு, அ.பிரசாத், மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ந.செல்வம், திருவை ஒன்றிய கழகத் தலைவர் சு.திருமலைக் குமரேசன், பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.