கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.6.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தக் லைப் படத்திற்கு தடை கிடையாது.. “குண்டர்கள்” படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது. கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை கிடையாது. இதுபோன்ற நடவடிக்கையை கர்நாடகா உயர் நீதிமன்றம் எதன் அடிப்படையில் மேற்கொண்டது என்று கண்டனத்தை தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கீழடி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் டில்லியிலிருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. அமர்நாத் தாக்கல் செய்திருந்த கீழடி ஆய்வறிக்கையில் ஒன்றிய அரசு திருத்தம் கேட்டிருந்த நிலையில் இடமாற்றம் நடந்துள்ளது. தலைவர்கள் கண்டனம்.

* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஜே.டி.யு கட்சியின் எம்.பி. குஷலேந்திர குமார் பேச்சு.

* தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி தேர்தலில் அளிப்பது குறித்து அறிக்கை அளித்திட சட்டத்துறைக்கு முதலமைச்சர் ரேவந்த் உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை “நாசப்படுத்தும்” மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக திமுக இளைஞர் அணி ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பெறுவதில் சிரமங்களை எதிர் கொள்ளும் முதியவர்கள், ஊனமுற்றோருக்கு, பொது விநியோக முறையின் (PDS) கீழ் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது.

தி இந்து:

* இந்தியா கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் எஸ்பியும் இணைந்து போட்டியிடும் என்று சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் பேட்டி.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *