சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வுக்கு அங்கீகாரம் வழங் காத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க.மாணவரணி சார்பில் மதுரை விரகனூரில் 1 இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
இதையொட்டி முதலமைச் சர் ஸ்டாலின் நேற்று (17.6.2025) வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்ப தாவது:-
எத்தனை, எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி, அறிவியல் துணைகொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை… மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களைத் திருத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.