கீழடி அகழாய்வு திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

1 Min Read

சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வுக்கு அங்கீகாரம் வழங் காத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க.மாணவரணி சார்பில் மதுரை விரகனூரில் 1 இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

இதையொட்டி முதலமைச் சர் ஸ்டாலின் நேற்று (17.6.2025) வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்ப தாவது:-

எத்தனை, எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி, அறிவியல் துணைகொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை… மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களைத் திருத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *