திருச்சி, ஜூன் 18- சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 14.06.2025 முதல் 15.06.2025 வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கான “Spectroscopy & Biophysical Characterization” இருநாள் பயிற்சியினை நடத்தியது.
வினாடி-விடைப் போட்டி
இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதியியல் துறை முதுநிலை மாணவர் ஆ.ஜீவகுமார் கலந்து கொண்டு, பயிற்சியின் நிறைவில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 2000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முதல் பரிசு
பரிசு வென்ற மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI), வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக்ககழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பல கல்லூரிகளிலிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு கொண்ட இப்பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர் ஆ. ஜீவகுமார் முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.