சென்னை, ஜூன் 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஅய் (எம்எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத் தம்பி ஆகியோர் விடுத்த கூட்டறிக்கை வருமாறு:
பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடும், ஆதரவும் தெரிவிக்கும் வகையிலும், இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும் நாடு தழுவிய இயக்கத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் டெல்லியில் கூடி அறைகூவல் விடுத்தன. அதன்படி, வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு, சென்னை, சைதாப்பேட்டையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.