தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (20.6.2023) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து, நான்கு இணையர்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி, பீகார் மாநில நீர்வளத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் கே.பூண்டி கலைவாணன் ஆகியோர் உள்ளனர்.