செய்திச் சுருக்கம்

1 Min Read

டில்லி தமிழர்களுக்கு
உதவிக்கரம் நீட்டிய மு.க.ஸ்டாலின்

டில்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரமும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி

வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. அனைத்து பன்னாட்டு விதிமுறைகளையும் மீறி இஸ்ரேல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரான் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள ஊடங்கள் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

36 மணிநேரத்தில் 4-ஆவது விமானத்தில் கோளாறு!

அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகளை அச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குஜராத் விபத்திற்கு பிறகு கடந்த 36 மணிநேரத்தில் ஏர் இந்தியா, சவுதி ஏர்லைன், லுஃப்தான்சா என 4 விமானங்கள் நடுவானில் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்தன. டில்லி – ராஞ்சி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இன்ஜின் கோளாறால் மீண்டும் டில்லியில் தரையிறங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை

உலகின் டாப் 100 பல்கலை.,களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது கிளையை சென்னை மற்றும் மும்பையில் அமைக்கிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவுசார் நகரத்தில் அமையவுள்ள இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படவுள்ளன. இப்பல்கலைக்கழகம் அமைய 18 மாத அவகாசம் உள்ளதால், கட்டணம், சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *