சிறந்த மனித நேயம் மகப்பேறு விடுமுறைக்கு பின்னர் 209 பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாறுதல் தமிழ்நாடு அரசு தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 16- பேறுகால விடுமுறைக்கு பின்னர் குழந்தையை பராமரிக்க வசதியாக 209 பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாறுதல் வழங் கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு காவலர் துறையில் பணி யாற்றும் பெண் காவலர் களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. மகப்பேறு விடுமுறை முடிவடைந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பும் மாவட் டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவலர் துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழாவில் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதமாக உட னடியாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இதன் மூலம் 209 பெண் காவலர் பயன் அடைந்துள்ளனர்.

விரும்பிய
இடத்தில் பணி

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (15.6.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி விப்பை தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவலர் தங்களது பேறுகால விடுமுறைக்கு பின்னர் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு ஏதுவாக மற்ற மாநகரம், மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப் பித்து இருந்தனர்.

கடந்த 3ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்ப டையில் அவர்கள் 209 பேருக்கும் விரும்பிய இடத் துக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *