டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அரசு கெஜட் அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடும். ஜாதி வாரி கணக்கெடுப்பும் இணைந்து நடத்த முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் நிதிஷ் குமார் அரசில் அரசியல் வாரிசுகளுக்கு பதவி: ‘ஜமாய் ஆயோக்’ (மருமகன் ஆணையம்) அமைக்க தேஜஸ்வி கிண்டல். மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் அசோக் சவுத்ரி போன்ற அரசியல் பிரமுகர்களின் மருமகன்களுக்கு வெவ்வேறு ஆணையங்களில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
தி இந்து:
* “ஒரு நாடு, ஒரு தேர்தல்” (ONOE) திட்டத்தின் கீழ் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முயற்சிப்பது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் பிராந்திய சுயாட்சியை அச்சுறுத்தும் என பஞ்சாபில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆம் ஆத்மி கட்சி (AAP), காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் (SAD) ஆகியவை எதிர்ப்பு.
* பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடுகளின் சுற்றுப்பயணம் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம்,: வெளிநாடுகளுக்கு செல்வது என்றால் பிரதமருக்கு உற்சாகம் மேலிடுகிறது; ஆனால் மணிப்பூர் செல்வதென்றால், துன்பமாக உள்ளதா? என காங்கிரஸ் கேள்வி.
*திராவிட மாடல் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்: எல்லா தடைகளையும் தாண்டி, அய்.அய்.டி. மும்பையில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேருகிறார், விருதுநகர் தமிழ்நாடு அரசுப் பள்ளியைச் சேர்ந்த பெண் யோகேஸ்வரி
– குடந்தை கருணா