270 பேரை பலி கொண்ட அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று விமானத்தில் பயணம்

1 Min Read

கவுகாத்தி, ஜூன்.16-அசாமின் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சுமார் 170 பயணிகளுடன் 14.6.2025 அன்று இரவு 9.20 மணிக்கு கொல்கத்தா புறப்பட தயாரானது.

அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டி ருப்பது கண்டறியப்பட் டது. அதை சரி செய்யும் பணிகளில் நிபுணர் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால் நள்ளிரவு கடந்தபிறகும் அதை சரி செய்ய முடியவில்லை.

எனவே பயணிகளை இறக்கி அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்தனர். பின்னர் நேற்று (15.6.2025) காலையில் 9.30 மணியளவில் மீண்டும் விமானத் தில் ஏற்றினர். அப்போதும் விமா னத்தில் கோளாறு சரி செய்ய முடியவில்லை.

பின்னர் அவர்களை மீண்டும் விமானத்தில் இருந்து இறக்கி பிற்பகல் 3.34 மணிக்கு மற்றொரு விமானம் மூலம் கொல்கத்தா அனுப்பி வைத்தனர். இதனால் 18 மணி நேரத்துக்கு மேல்தாமதமாக அவர்கள் கொல்கத்தா கிளம்பினர்.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 12-ஆம் தேதி ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கி 270 பேரை பலி கொண் டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஏர் இந்தியாவின் மற்றொரு விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *