ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

1 Min Read

சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22). திருநம்பியான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பிறப்பால் பெண்ணாக பிறந்தேன். 15 வயதில் என் உடலில் ஆணுக்குரிய சில மாற்றம் ஏற்பட் டது. இதையடுத்து திருநம்பி ஆனேன். 

மாறா என்ற பெயரும் வைத்துக் கொண்டேன். என்னை என் குடும்பத்தார் முதலில் ஏற்காவிட்டாலும், பின்னர் படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். எனக்கு ஒரு அக்கா உள்ளார். நாங்கள் இருவ ரும்தான் பெற்றோருக்கு வாரிசு.

இந்த நிலையில், என் தந்தை கடந்த ஆண்டு சாலை விபத்தில் பலியாகி விட்டார். 

மோட்டார் வாகன விபத்து வழக்குகளை தொடர்வதற்காக திருக்கழுக்குன் றம் தாசில்தாரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்தோம். 

அதில் என்னை திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் கேட்டோம். அதற்குரிய ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய் தேன். ஆனால், அவ்வாறு சான்றி தழ் வழங்க தாசில்தார் மறுத்து விட்டார். எனவே, திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட வேண் டும்‘’ என்று வாதிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்ட பாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் யு.அனுநிதா ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரை திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *