தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம மூலம் 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.631 கோடி இழப்பீடு

1 Min Read

சென்னை, ஜூன் 16- மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 14.6.2025 அன்று நடந்தது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.சிறீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மேற்பார்வையில் நடந்தது.

வழக்குகளுக்குத் தீர்வு

இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும் ஏற்படுத்தப் பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப் பட்டன. தமிழ்நாடு முழுவதும் 496 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 561 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.631 கோடியே 80 லட்சத்து 27 ஆயிரத்து 703 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *