கண்களைக் காப்போம்!

viduthalai
1 Min Read

காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது காற்றில் கலந்த தூசிகள், புகை, அழுக்குகள் உள்ளிட்டவற்றால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும்.

இதை நாம் பெரும்பாலும் கைகளை கழுவாமல் அப்படி தேய்த்தால்தான் திருப்தி கிடைக்கும் என அவசர அவசரமாக தேய்த்து விடுவோம். பெரும்பாலும் கைகளில் இருந்து தான் கண்களுக்கு தொற்றுக் கிருமிகள் பரவுகிறது.

இவ்வாறு செயவதன் மூலம் கண்கள் சிவந்தும், வீங்கியும் காணப்படும்.தற்காலிகமாக தோன்றும் இந்த தொந்தரவு களை போக்க ஒருசில இயற்கை மருந்து களைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்கள் மீது வைத்தால், வறண்ட கண்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.

பாலை துணியில் நனைத்து இமைகள் மீது துடைத்து வர அரிப்பு குணமாகும்.

தயிரை கண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் துணியை நனைத்து துடைத்தால் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை சாறை கொண்டு கண்களை துடைக்கலாம். எரிச்சல் இருந்தாலும் அழுக்குகள் எளிதில் வெளியேறி நிவாரணம் கிடைக்கும்.

சீரகத்தை தண்ணீரை கொண்டு அன்றாடம் இருவேளை கண்களை கழுவி வந்தால், எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.

பனிக் கட்டிகளை துணியில் சுற்றி கண்கள் மீது ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.

இவை அனைத்தும் தற்காலிக தொந்தரவுகளுக்கு தீர்வு அளிக்கும். தொற்றுப் பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *