நீட் தேர்வு முடிவில் குளறுபடி: கோவை மாணவி புகார்
மருத்துவ இளங்கலை பட்டப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் 14.6.2025 அன்று வெளியானது. இதில் 680 மார்க் பெற்று 40ஆவது ரேங்க் எடுத்த கோவை மாணவி அபிஷியாவின் பெயர், தேசிய டாப் 100 தரவரிசையில் இல்லை என புகார் அளிக்கப் பட்டுள்ளது. அதோடு, 99.98-க்கு பதிலாக 88.29% என கொடுக்கப்பட்டுள்ளதால், அம்மாணவி தேசிய தேர்வு முகமையில் இமெயில் மூலம் புகாரளித்துள்ளார். ஏற்கெனவே, நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றம், முடிவுகளில் குளறுபடி என பல புகார்கள் உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை
வரவு வைக்கப்பட்டது
வரவு வைக்கப்பட்டது
மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி, 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்கி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணம் வருமா (அ) தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் மின்னஞ்சலில் இதை கவனியுங்கள்!
இணைய வழியில் வேலை தேடும்போது, பலரும் புனைப்பெயர்களுடன் இருக்கும் மின்னஞ்சல் முகவரி(இமெயில் ID’)யை இணைத்திருப்பார்கள். ஆனால், அப்படியான பயோடேட்டாக்களை மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் (HR) நிராகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மின்னஞ்சல் முகவரியில் அனுப்புநரின் பெயர் தெளிவாக தெரிய வேண்டும் என HR-கள் விரும்புவதாகவும், அதுவே Professionalism-த்தின் அடையாளம் என்றும் கூறப்படுகிறது. இனி கவனம் கொள்ளுங்கள்.
அரசியலுக்கு ஆன்மிக
மாநாட்டை பயன்படுத்தாதீர்கள்!
மாநாட்டை பயன்படுத்தாதீர்கள்!
இந்து முன்னணி சார்பாக மதுரையில் நடைபெறவுள்ள முருகன் பக்தர்கள் ஆன்மிக மாநாடு தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 59 நிபந்தனைகளுடன் காவல் துறை பாதுகாப்புடன் மாநாடு நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். அதேநேரம் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் மாநாட்டை பயன்படுத்தினால், அது தொடர்பாக மத நிறுவன சட்டம் 1988இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.